சில நொடி க(வி)தை

அகரவரிசைப் பட்டியலில் அவன் பெயர் இல்லை.


தேர்ச்சிப் பெறாதவனைப் பெற்றெடுத்தோர் மனம் உடைந்தனர்.

அப்பா அடித்தார். அம்மா தடுத்தாள், புலம்பினாள்.


ஒரு முடிவுடன் கிளம்பினான்.

சினிமாவில் சேர சென்னைக்குச் சீட்டெடுத்தான்.


அடுத்த நாள் தினசரியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் பட்டியல் வெளிவந்தது.


இவனுக்கு முதலிடம்.