ஒரு நொடி க(வி)தை

காதலி கவிதை நூல் பரிசளித்தாள்.


காதலன் பூங்கொத்துப் பரிசளித்தான்.


காதலைத் துறந்த மணமக்கள் புன்முறுவலோடு மேடையில் நின்றார்கள்.


திருமணங்கள் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.

சில நொடி க(வி)தை

வீட்டின் நிலவரம், பிள்ளைப் பெற்ற மதிப்பெண்,

அம்மாவின் உடல்நிலை, அவள் முதலாளியின் கெடுபிடி

அனைத்தையும் விசாரிக்க ஆசை உண்டு.

நேரம் இல்லை.

திரளின் நடுவே அவள் முன்வந்தபோது வினவினேன்.

'நல்லா இருக்கியா?'

பதிலாக கிடைத்தது கண்ணீர்.

எங்கோ உள்ளிருந்து எட்டிப் பார்த்தது அவள் கோபம்.

கைதானது நான்.

தண்டனை அவளுக்கு.